Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 18, Verse 28

அயுக்11: ப்1ராக்1ருத1:ஸ்த1ப்34: ஶடோ2 நைஷ்க்1ருதி1கோ1‌லஸ: |

விஷாதீ3 தீ3ர்க4ஸூத்1ரீ ச11ர்1தா1 தா1மஸ உச்1யதே1 ||28||

அயுக்தஹ----ஒழுக்கமற்ற; ப்ராக்ரிதஹ--—கொச்சையான; ஸ்தப்தஹ--—பிடிவாதமான; ஶடஹ--—தந்திரமான; நைஷ்க்ருதிகஹ-----நேர்மையற்ற, வஞ்சகமுள்ள அல்லது இழிவான; அலஸஹ----சோம்பேறித்தனமான; விஷாதி—மகிழ்ச்சியற்ற மற்றும் சோகமான; தீர்க-ஸூத்ரீ--—காலம் கடத்து பவர்; ச--—மற்றும்; கர்தா--— செய்பவர்; தாமஸஹ--—அறியாமை முறையில்; உச்யதே---என்று கூறப்படுகிறது

Translation

BG 18.28: அறியாமை முறையில் செயல்படுபவர் ஒழுக்கம் இல்லாதவர், கொச்சையானவர், பிடிவாதமானவர், வஞ்சகமுள்ளவர், சோம்பேறித்தனமானவர், அவநம்பிக்கை கொண்டவர் மற்றும் தள்ளிப்போடுபவர்.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது அறியாமை முறையில் செயல்களை செய்பவர்கள்ப் பற்றி விளக்குகிறார். அவர்களின் மனம் எதிர்மறையான தொல்லைகளால் அழிக்கப்பட்டுள்ளது, இதனால் அவர்கள் ஒழுக்கமற்றவர்கள் (அயுக்தஹ) ஆவர். சரியான மற்றும் முறையற்ற நடத்தை பற்றி வேதங்கள் கட்டளைகளை வழங்குகின்றன. ஆனால் அறியாமை முறையில் வேலை செய்பவர்கள் (ஸ்தப்தஹ) தங்கள் பார்வையில் பிடிவாதமாக இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தங்கள் காதுகளையும், மனதையும் பகுத்தறிவுக்கு மூடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் பெரும்பாலும் அவர்களின் வழிகளில் மற்றும் நேர்மையற்றவராக இருக்கிறார்கள். அவர்கள் கொச்சையானவர்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் மிருகத்தனமான இயல்புணர்ச்சியை கட்டுப்படுத்துவதில் நம்பிக்கை அற்றவர்கள். அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் இருந்தாலும், அவர்கள் முயற்சியை கடுமையானதாகவும், வேதனை நிறைந்ததாகவும் பார்க்கிறார்கள். அதனால் அவர்கள் சோம்பேறிகளாகவும் காலம் தாழ்த்துவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் இழிவான மற்றும் கீழ்த்தரமான எண்ணங்கள் மற்றவர்களை விட அவர்களை அதிகம் பாதிக்கின்றன, அவர்களை மகிழ்ச்சியற்ற மற்றும் சோகமானவர்களாக ஆக்குகின்றன.

ஸ்ரீமத் பாகவதம் செயல்களைச் செய்பவர்களின் வகைகளையும் விவரிக்கிறது:

ஸாத்1விக1ஹ கா1ரகோ1 ’ஸங்கீ3 ராகா3ந்தோ4 ராஜாஸஹ ஸ்மிருத1

தா1மஸஹ ஸ்மிருதி1-விப்1ரஷ்டோ1 நிர்கு3ணோ மத்3-அபா1ஶ்ரயஹ

(11.25.26)

‘தான் செய்யும் தொழிலில் பற்றற்று இருப்பவர் ஸாத்வீக நன்மை இயல்புடையவர்; தான் செய்யும் செயல்களிலும் அதன் முடிவுகளிலும் அளவுக்கு அதிகமாக பற்று கொண்டவர் ஆர்வ இயல்புடையவர்.; அறியாமை இயல்புடையவர் பாகுபாடின்றி இருக்கிறார்கள்; என்னிடம் சரணடைந்தவர்கள் மூன்று முறைகளுக்கும் அப்பாற்பட்டு இருக்கின்றனர்.’

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
18. மோக்ஷ ஸன்யாஸ யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!